• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது - 380 கிராம் கஞ்சா பறிமுதல்!

  • Share on

தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்  உத்தரவின்படி தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர்  ராஜாராம் மற்றும் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று (20.03.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது,

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி அக்ஸார் பெயிண்ட் ஜங்சன் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் தூத்துக்குடி மேலசண்முகபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் மகன் தீபன்ராஜ் (24) என்பதும் அவர் அப்பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

உடனே மேற்படி போலீசார் தீபன்ராஜை கைது செய்து அவரிடமிருந்த 380 கிராம் கஞ்சா மற்றும் ரூபாய் 2,000 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி கைது செய்யப்பட்ட  தீபன்ராஜ் மீது ஏற்கனவே தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் உட்பட 4 வழக்குகள் குறிப்பிடத்தக்கது.

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையரிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 50வது வார்டு அதிமுக நிர்வாகிகள் மனு!

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்!

  • Share on