• vilasalnews@gmail.com

ஒரே நாளில் 4 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி மற்றும் போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட 4 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 26.06.2022 அன்று முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முள்ளக்காடு நேருஜி நகரைச் சேர்ந்த சுடலையாண்டி மகன் கருப்பசாமி (37) என்பவர் குடும்ப பிரச்சனை காரணமாக தனது மனைவியான முத்துமாரி (32) என்பவரை கொலை செய்த வழக்கில் மேற்படி எதிரி கருப்பசாமியை  முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கில் கருப்பசாமி மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயசீலனும்,

கடந்த 06.01.2023 அன்று முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வல்லநாடு பகுதியில் நடந்து வந்துகொண்டிருந்த ஒருவரை வழிமறித்து தகராறு செய்து அரிவாளால் தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் வல்லநாடு கிழக்கு தெருவை சேர்ந்த கோமு மகன் உத்தண்ட ராமன் (24) என்பவரை முறப்பநாடு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கில் உத்தண்ட ராமன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் ஜமாலும்,

கடந்த 13.01.2023 அன்று ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழையகாயல் ராமச்சந்திராபுரம் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்த ஒருவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வழக்கில் பழையகாயல் புல்லாவழி பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் அதிபன் (25) என்பவரை ஆத்தூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கில் அதிபன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகனும்,

கடந்த 04.01.2023 அன்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 8 வயது சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கோவில்பட்டி மந்திதோப்பு பகுதியைச் சேர்ந்த வெயிலுமுத்து மகன் வெங்கடேஷ்வரன் (எ) வெங்கடேஷ் (19) என்பவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கில் வெங்கடேஸ்வரன் (எ) வெங்கடேஷ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த்தும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.

மேற்படி காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ், முள்ளக்காடு நேருஜி நகரைச் சேர்ந்த சுடலையாண்டி மகன் 1) கருப்பசாமி, வல்லநாடு கிழக்கு தெருவை சேர்ந்த கோமு மகன் 2) உத்தண்ட ராமன், பழையகாயல் புல்லாவழி பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் 3) அதிபன் மற்றும் கோவில்பட்டி மந்திதோப்பு பகுதியைச் சேர்ந்த வெயிலு முத்து மகன் 4) வெங்கடேஷ்வரன் (எ) வெங்கடேஷ்; ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மேற்படி 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

  • Share on

கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் : மாவட்ட ஆட்சியர்

ஸ்ரீவைகுண்டம் அருகே தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சி ஈடுபட்ட ரவுடி கைது!

  • Share on