• vilasalnews@gmail.com

தூத்துக்குடி அருகே கணவன் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய மனைவி

  • Share on

தூத்துக்குடி அருகே கணவன் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றி கொல்ல முயன்றதாக மனைவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அருகே உள்ள நடுக்கூட்டுடன் காடு பகுதியைச் சேர்ந்தவர் சுடலை ( 32 ) இவர் தூத்துக்குடி மாநகராட்சியில் தற்காலிக டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி ( 27 ). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

மகாலட்சுமி அங்குள்ள தனியார் பள்ளியில் கிளார்க்காக வேலை செய்து வருகிறார். சுடலையின் மூத்த சகோதரி இறந்துவிட்டதால் அவரது இரண்டு குழந்தைகள் மற்றும் தாய் ஆகியோர் சுடலை பராமரிப்பில் இருந்து வருகின்றனர்.

இது தொடர்பாக சுடலை மற்றும் அவரது மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சுடலை மனைவியை தாக்கியுள்ளார்.

இந்த நிலையில் இரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது மகாலட்சுமி கொதிக்கும் வெந்நீரை கணவன் மீது ஊற்றியதாக தெரிகிறது.

இதில் உடல் வெந்து பலத்த காயம் ஏற்பட்டதால் சுடலை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் மகாலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே சுடலை தாக்கியதில் காயமடைந்த மகாலட்சுமியும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது புகாரின் பேரில் சுடலை மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

  • Share on

ஒவ்வொரு குடும்பத்திற்கும் தென்னங்கன்று - ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் வசுமதி அம்பாசங்கர் வழங்கினார்!

தூத்துக்குடியில் கனிமொழி பிறந்த நாள் விழா : அரசு மருத்துவமனையில் பிறந்த 15 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்!

  • Share on