• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் சொத்து தகராறில் தம்பதி வெட்டிக்கொலை!

  • Share on

தூத்துக்குடி அண்ணா நகரில் சொத்து தகராறில் தொழிலாளி  ராம்குமார் மற்றும் அவரது மனைவி மாரியம்மாள் இருவரும் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அண்ணா நகர் 6 வது தெருவில்  தொழிலாளி  ராம்குமார் மற்றும் அவரது மனைவி மாரியம்மாள் ஆகியோர் வசித்து வருகின்றனர். 

இந்த நிலையில் மாரியம்மாளின் உடன் பிறந்த அண்ணன் முருகேசன் ( வயது 50 ) என்பவருக்கும், மாரியம்மாளுக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது. இந்த தகராறில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முருகேசன் சொத்துக்கள் அனைத்தும் மாரியம்மாள்  பெயருக்கு மாற்றப்பட்டதாம். இதனால் முருகேசன் மற்றும் அவரது மகன் மகேஷ் (வயது 20) இருவரும் கடும் ஆத்திரமடைந்தனர்.

இதனால் இருவரும் சேர்ந்து  ராம்குமார் மற்றும் அவரது மனைவி மாரியம்மாள் 2 பேரையும் கொலை செய்ய திட்டமிட்டனர்.

இந்த நிலையில் இன்று இரவு 8 மணி அளவில் ராம்குமார் தனது மோட்டார் பைக்கில் அண்ணா நகர் 6வது தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முருகேசன் அவரது மகன் மகேஷ் இருவரும் சேர்ந்து மிளகாய் பொடியை அவரது கண்ணில் தூவினார்கள். இதில் ராம்குமார் நிலை தருமாறு கீழே விழவும் அவரை இருவரும் சேர்ந்து சரமரியாக அருவாளால் வெட்டினார்கள். இதில் ராம்குமார் அதே இடத்தில் பரிதாமாக இறந்தார். பின்னர் இருவரும் மாரியம்மாள் வீட்டுக்கு சென்றனர். அங்கே வாசலில் நின்று கொண்டிருந்த மாரியம்மாள் மீதும் மிளகாய் பொடியை தூவி அவரையும் சரமரியாக அருவாளால் வெட்டினார்கள். இதில் மாரியம்மாள் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம், உதவி ஆய்வாளர்கள் கங்கைநாத பாண்டியன், சிவகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து  சென்று 2பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் சத்யராஜ் பார்வையிட்டார்.

மேலும், இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து கணவன் மனைவியை கொலை செய்த முருகேசன் மற்றும் அவரது மகன் மகேஷ் இரு வரையும் தேடி வருகிறார்கள். கிறிஸ்மஸ் நன்னாளில் இந்த சம்பவம் நடந்தது தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


  • Share on

மகள் பிறந்தநாள் : கடம்பூர் ராஜூ எம்எல்ஏவுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்!

கோவில்பட்டி : முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கோரிக்கைகளுக்கு மத்திய ரயில்வே அமைச்சர் பதில்!

  • Share on