• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் ஒரே நாளில் 3 கடை பூட்டை உடைத்து தொடர் திருட்டு - 2 ரவுடிகள் உட்பட 3 பேர் கைது!

  • Share on

தூத்துக்குடியில் மளிகை கடை மற்றும் டீ கடைகளில் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்களை திருடிய வழக்கில் 2 ரவுடிகள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 07.12.2022 அன்று இரவு தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரையன்ட்நகர் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூபாய் 85,000 பணம் மற்றும் பொருட்களும், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூபாய் 40,000 பணம் மற்றும் சிவந்தாகுளம் ரோடு பகுதியில் உள்ள ஒரு டீ கடையின் பூட்டை உடைத்து ரூபாய் 1000/- பணத்தையும் மர்ம நபர்கள் அடுத்தடுத்து திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் நேற்று (08.12.2022) அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு)  அய்யப்பன், உதவி ஆய்வாளர்கள்  கங்கைநாத பாண்டியன், சிவக்குமார், பாஸ்கரன் மற்றும் தலைமை காவலர் மாணிக்கராஜ் முதல் நிலை காவலர்கள் சாமுவேல், மகாலிங்கம், காவலர்கள் செந்தில்குமார், திருமணிராஜன், முத்துபாண்டி ஆகியோர் அடங்கிய தூத்துக்குடி நகர உட்கோட்ட தனிப்படை போலீசார் ஆகியோர் அப்பகுதில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளின் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி பிரையன்ட்நகர் பகுதியைச் சேர்ந்த தனுஷ்கோடி மகன் கார்த்திக் (எ) 302கார்த்திக் (23), தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் மகன் மூர்த்தி (22) மற்றும் தூத்துக்குடி அழகேசபுரம் பகுதியைச் சேர்ந்த ஸ்டான்லி மகன் சாம் ஜோஸ்வா (22) ஆகியோர் மேற்படி கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து மேற்படி போலீசார்  கார்த்திக் (எ) 302கார்த்திக், மூர்த்தி மற்றும் சாம் ஜோஸ்வா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி கைது செய்யப்பட்ட  கார்த்திக் (எ) 302கார்த்திக் மீது தென்பாகம் காவல் நிலையத்தில் 6 திருட்டு வழக்குகள் மற்றும் கொலை மிரட்டல் வழக்குகள் உட்பட 10 வழக்குகளும், சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், தெர்மல்நகர் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், மத்தியபாகம் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும் என மொத்தம் 13 வழக்குகளும், மூர்த்தி மீது தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, திருட்டு வழக்குகள் என 10 வழக்குகளும், தெர்மல்நகர் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், ஆத்தூர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என மொத்தம் 13 வழக்குகளும், சாம் ஜோஸ்வா மீது வடபாகம் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Share on

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி பிறந்த நாள் - மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டம்!

கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்!

  • Share on