• vilasalnews@gmail.com

மாப்பிள்ளையூரணி கிராமசபை கூட்டம் - முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்!

  • Share on

நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சி தினமாக அறிவித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து மாப்பிள்ளையூரணி கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணி ஊராட்சியில், தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் உள்ளாட்சி தின கிராமசபை கூட்டம்  ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமையில் மாப்பிள்ளையூரணி குளக்கரையில் நடைபெற்றது. 

பல்வேறு பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்கள் கேள்விகள் எழுப்பினார்கள். அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கவுரை வழங்கினார்கள்.

தொடர்ந்து, ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் கிராமசபை கூட்டத்தில் பேசுகையில்:-

மாப்பிள்ளையூரணி வளர்ச்சிக்கு  அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின் படி பல்வேறு சாலை மற்றும் கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மாவட்ட ஆட்சியருக்கு பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளார். அதன்படி அனைத்து பகுதிகளிலும் உள்ள வார்டு உறுப்பினர்களின் குறைகளை கேட்டு ஊராட்சி நிர்வாகம் பல்வேறு பணிகளை செய்து வருகிறது.

மக்கள் நலன் தான் எங்களுக்கு முக்கியம். சிறந்த ஊராட்சியாக வளர்ச்சியடைவதற்கு மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து பொதுமக்கள் வழங்க வேண்டும். நெகிழிகளை தவிர்த்து சாலைகளில் குப்பைகளை கொட்டாமல் தூய்மை காவலர்களிடம் கொடுக்க வேண்டும். அனைவருடைய ஒத்துழைப்பு அவசியம் என்று கேட்டுக் கொண்டார். 

மேலும், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மை காவலர்கள், பணியாளர்கள் 73 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சி தினமாக அறிவித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் கணக்கெடுப்பு, வடகிழக்கு பருவமழை குறித்து முன்னெச்சரிக்கை, புதிய மகளிர் சுய உதவிக்குழுக்கள், இணையவழி மூலம் வீட்டுவரி, சொத்துவரி செலுத்துதல், 2021 22 மற்றும் 22 23 ஆகிய ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் பன்னை மற்றும் பன்னை சாரா திட்ட இனங்கள் மேற்கொள்ளப்படுதல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மீன்வளத்துறை மேற்பார்வையாளர் சக்திஉடையார், தூத்துக்குடி ஊராட்சி ஓன்றிய மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் மகேஷ்குமார், மாப்பிள்ளையூரணி கூட்டுறவு கடன்சங்க செயலாளர் பாலமுருகன், கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் வினோத்,  சுகாதார ஆய்வாளர் வில்சன், ரேசன்கடை பணியாளர் பிரபாகர், ஊரக வளர்ச்சி வாழ்வாதார இயக்க மகளிர்திட்டம் ஓருங்கிணைப்பாளர் அங்காளஈஸ்வரி, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தமிழ்ச்செல்வி, தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, ஒன்றிய துணைச்செயலாளர் கணேசன், ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ்பாலண், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, மகேஸ்வரி காமராஜ், வசந்தகுமாரி, தங்கமாரிமுத்து, சக்திவேல், தங்கபாண்டி, பெலிக்ஸ், ராணி, மாவட்ட பிரதிநிதி சப்பாணிமுத்து, தாளமுத்துநகர் சப்இன்ஸ்பெக்டர்கள் முத்தையா, சதிஷ்குமார்,  மாப்பிள்ளையூரணி கூட்டுறவு கடன்சங்க துணைத்தலைவர் சிவக்குமார், தனிப்பிரிவு ஏட்டு முருகேசன், கிராம நிர்வாக அலுவலர் அமலநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், கிளைச்செயலாளர் காமராஜ், கௌதம் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

குளத்தூரில் கிராமசபை கூட்டம் - முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

தூத்துக்குடி அருகே டிராவல்ஸ் உரிமையாளரை வெட்டியவருக்கு 4 ஆண்டு சிறை!

  • Share on