• vilasalnews@gmail.com

குளத்தூர் அருகே செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது - ரூ.1.40 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்பு!

  • Share on

குளத்தூர் அருகே கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணை தாக்கி செயின் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து, ரூ.1.4லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் துவரந்தை பகுதியை சேர்ந்த கருப்பசாமி மற்றும் அவரது மனைவி கிருஷ்ணவேணி (24) மற்றும் 3 குழந்தைகளுடன் கடந்த 26.06.2022 அன்று இரவு இருசக்கர வாகனத்தில் புதியம்புத்தூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி வரும்போது, குளத்தூர் - வேம்பார் கடற்கரை சாலை சுப்பிரமணியபுரம் விலக்கு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கிருஷ்ணவேணி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க நகைகளை பறித்து சென்றுள்ளனர். 

இதுகுறித்து கிருஷ்ணவேணி அளித்த புகாரின் பேரில் குளத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையில் குளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) விஜயலெட்சுமி தலைமையில் உதவி ஆய்வாளர் முத்துமாரி மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்நிலையில் நேற்று தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, எப்போதும்வென்றான் பேருந்து நிலையம் அருகில் சந்ததேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் எப்போதும்வென்றான் காட்டுநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர்களான திருமலை மகன் கலைச்செல்வன் (25) மற்றும் மன்மதராஜ் மகன் கார்த்தி (27) ஆகியோர் என்பதும், அவர்கள் மேற்படி கிருஷ்ணவேணியிடம் தங்க நகைகளை பறித்து சென்றதும்  தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 5 பவுன் தாலிச் செயின் மற்றும் 2 பவுன் தங்க செயின் என மொத்தம் ரூ.1லட்சத்து 40ஆயிரம் மதிப்புள்ள 7 பவுன் தங்க நகைகள் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட கலைச்செல்வம் மீது கடம்பூர் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், கார்த்திக் மீது கடம்பூர், குளத்தூர் மற்றும் எப்போதும்வென்றான் ஆகிய காவல் நிலைங்களில் 4 வழக்குகளும் உள்ளது குறிப்பிடதக்கது. செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களை கைது செய்து தங்க நகைகளை மீட்ட தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டினார்.

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தினமும் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை - மேயர் ஜெகன் பெரியசாமி

வடக்கு சோட்டையன் தோப்பு பகுதியில் தூய்மை பணி - ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்

  • Share on