• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் குடும்ப பிரச்சினையில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மருமகன் கைது!

  • Share on

சிலுவைபட்டி வேளாங்கண்ணி மாதா கோவில் தெருவில், குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு செய்து இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிலுவைபட்டி வேளாங்கண்ணி மாதா கோவில் தெருவை சேர்ந்த அந்தோணிசாமி மகன் மைக்கேல் ராஜ் (60) என்பவருக்கும் அவரது மருமகனான சிலுவைபட்டி பாத்திமா மாதா கோவில் தெருவை சேர்ந்த பாக்யராஜ் மகன் நெல்சன் ஜான் ராஜாசிங் (43) என்பவருக்கும் இடையே குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இதன் காரணமாக கடந்த 06.08.2022 அன்று மேற்படி மைக்கேல் ராஜ் அவரது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த மேற்படி நெல்சன் ஜான் ராஜாசிங் என்பவர் அவரிடம் தகராறு செய்து இரும்பு கம்பியால் தாக்கி, அவரது செல்போனை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து மைக்கேல்ராஜ் கடந்த 06.08.2022 அன்று அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் சரண்யா வழக்குபதிவு செய்து மேற்படி நெல்சன் ஜான் ராஜாசிங்கை கைது செய்தார்.

  • Share on

தூத்துக்குடியில் 11ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

50 சதவீதம் மானியத்தில் நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தகவல்

  • Share on