• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு தினம் - அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் மவுன ஊர்வலம்!

  • Share on

மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் தி.மு.க. சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.

மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில், அவரது 4ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று காலை 8.30 மணிக்கு, திமுக வடக்கு மாவட்டபொருப்பாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில், மாநில பொதுக்குழு உறுப்பினரும், மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி முன்னிலையில், தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் முன்பு மவுன ஊர்வலம் தொடங்கி, எட்டையபுரம் சாலை வழியாக வந்து, திமுக வடக்கு மாவட்ட அலுவலகமான கலைஞர் அரங்கம் வந்து நிறைவடைந்தது.

அங்கு கருணாநிதியின் திருஉருவச்சிலைக்கு முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருஉருவப்படத்திற்கு, அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் திமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணைச்செலயாளர் துறைமுகம் புளோரன்ஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகம், மாவட்ட அணி செயலாளர்கள் மதியழகன், அந்தோணிஸ்டாலின், அன்பழகன், ரமேஷ், கஸ்தூரி தங்கம், உமாதேவி, பிரபு,

மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலட்சுமி, பகுதி செயலாளர்கள் மேகநாதன், ஜெயக்குமார், சுரேஷ்குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், மாவட்ட அணி துணை செயலாளர்கள் ராமர், சுபேந்திரன், சங்கர், நலம் ராஜேந்திரன், சின்னத்துரை,

மாநகர துணை செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், மாநகர அணி செயலாளர்கள் அருண்குமார், முருகஇசக்கி, ஆனந்தகபரியேல்ராஜ், ஜெயக்கனி, டேனி, மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், மாவட்ட பிரதிநிதிகள் கதிரேசன், சக்திவேல், தொழிற்சங்க செயலாளர் மரியதாஸ், மண்டலத்தலைவர் முருகன், மாநகர அணி துணை செயலாளர்கள் அருண்சுந்தர், முத்துராமன், சங்கரநாராயணன், பால்ராஜ், கிறிஸ்டோபர் விஜயராஜ், அந்தோணி கண்ணன், உலகநாதன், டைகர் வினோத், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், ஜான்சிராணி, பொன்னப்பன், வைதேகி, பவாணிமார்ஷல், மெட்டில்டா, சரண்யா, தெய்வேந்திரன், கண்ணன், இசக்கிராஜா, கந்தசாமி, ஜெயசீலி, பேபி ஏஞ்சலின்,

பகுதி இளைஞர் அணி செயலாளர்கள் சூர்யா, ரவி, முன்னாள் கவுன்சிலர்கள் ரவீந்திரன், செந்தில்குமார், ஜெயசி;ங், வட்டசெயலாளர்கள் நாராயணன், கங்காராஜேஷ், சதீஷ்குமார், சுப்பையா, அனல் சக்திவேல், கீதாசெல்வமாரியப்பன்,  ரவிசந்திரன், சேகர், வன்னியராஜ், முக்கையா, பாலு, பொன்ராஜ், நிர்வாகிகள் கருனா, அல்பட், ராஜா, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், லிங்கராஜா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதிமுக சார்பில் மாநில மீனரவணி செயலாளர் நக்கீரன், தொண்டரணி துணை அமைப்பாளர் பேச்சிராஜ், மகாராஜன், சரவணபெருமாள், உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல் மாநகர் முழுவதும் அனைத்து வார்டுகளிலும் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி படத்திற்கு வார்டு நிர்வாகிகள் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

  • Share on

தூத்துக்குடியில் தபால் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி

செய்துங்கநல்லூர் அருகே ரவுடி உட்பட 5 பேர் கைது!

  • Share on