• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் தபால் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி

  • Share on

தூத்துக்குடியில் தபால் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

தூத்துக்குடி நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய அஞ்சல்துறை நாடு முழுவதும் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்கள் சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக அனைத்து இல்லங்களிலும் மூவர்ணக்கொடி என்ற தலைப்பில் தூத்துக்குடி அஞ்சல் துறை சார்பில் இன்று விழிப்புணர்வு பேரணி நடந்தது.

தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் உள்ள தலைமை அஞ்சலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணியை தூத்துக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பொன்னையா தொடங்கி வைத்தார். உதவிக்கோட்ட கண்காணிப்பாளர்கள் குமரன், வசந்தா சிந்துதேவி, உப கோட்ட ஆய்வாளர் சுப்பையா மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட அஞ்சல்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். 

இந்த பேரணி தாமோதரநகர், புதுக்கிராமம் மற்றும் சிவந்தாகுளம் சாலை வழியாக சென்று மீண்டும் தலைமை அஞ்சலகத்தில் நிறைவடைந்தது.

  • Share on

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ஒரு லட்சம் வீடுகளுக்கு தேசிய கொடி வழங்கல்!

தூத்துக்குடியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு தினம் - அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் மவுன ஊர்வலம்!

  • Share on