• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் : 1வது வார்டில் பாஜக சார்பில் ஜெயலெட்சுமி வேட்பு மனு தாக்கல்!

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் 1 வது வார்டில் போட்டியிட பாஜக சார்பில் ஜெயலெட்சுமி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28ம்தேதி தொடங்கியது.

இந்நிலையில் இன்று காலை சில்வர்புரம், சுப்பிரமணியபுரம், பாலையா புரம், சங்கரபேரி, பண்டாரம்பட்டி, மீளவிட்டான், எஸ்.என்.ஆர் நகர், ராஜரத்தின நகர் ஆகிய பகுதிகளை கொண்ட 1வது வார்டில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட ஜெயலெட்சுமி என்பவர் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் உதவி தேர்தல் அலுவலரிடம் இன்று தனது வேட்பு மனு தாக்கல் செய்தார்.

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் : பாஜக சார்பில் 17 வது வார்டில் போட்டியிட மாரிச்சாமி வேட்பு மனு தாக்கல்

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் : திமுக சார்பில் 15 வது வார்டில் போட்டியிட இசக்கிராஜா வேட்பு மனு தாக்கல்!

  • Share on