• vilasalnews@gmail.com

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் புதிய சாதனை!

  • Share on

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 81.50 மீட்டர் நீளம் கொண்ட ராட்சத காற்றாலை இறகுகளை கையாண்டு புதிய சாதனை படைக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் காற்றாலை இறகு மற்றும் உதிரி பாகங்கள் கையாளுவதில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் 2 ஆயிரத்து 898 காற்றாலை இறகுகளும், 1,248 காற்றாலை கோபுரங்களும் கையாளப்பட்டு உள்ளன. உலகத்தரம் வாய்ந்த காற்றாலை இறகுகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் உள்ள இட வசதிகள், 8 வழி துறைமுக இணைப்புசாலை, சீரான தேசிய நெடுஞ்சாலை இணைப்பு போன்ற அம்சங்களை கருத்தில் கொண்டு, வ.உ.சி. துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்கின்றன.

அதன்படி வ.உ.சி. துறைமுகத்தில் 81.50 மீட்டர் நீளமும், 25 டன் எடையும் கொண்ட ராட்சத காற்றாலை இறகுகளை கையாண்டு புதிய சாதனை படைக்கப்பட்டு உள்ளது. இந்த காற்றாலை இறகுகள் ஜெர்மனிக்கு ஏற்றுமதி செய்வதற்காக இன்று கொண்டு வரப்பட்டது. துறைமுகத்தில் உள்ள அதிநவீன பளுதூக்கிகள் மூலம் இந்த காற்றாலை இறகுகள் கப்பலில் ஏற்றப்பட்டன. 142.8 மீட்டர் நீளம் கொண்ட எம்.ஒய்.எஸ்.டெஸ்நேவா என்ற கப்பலில் 81.50 மீட்டர் நீளம் கொண்ட 6 காற்றாலை இறகுகளும், 77.10 மீட்டர் நீளம் கொண்ட12 இறகுகளும் ஏற்றப்பட்டன. தொடர்ந்து கப்பல் ஜெர்மனிக்கு புறப்பட்டு சென்றது.

இதனால் காற்றாலை இறகுகளை சிறப்பாக, பாதுகாப்பான முறையில் கையாண்டு சாதனை புரிய உறுதுணையாக இருந்த கப்பல் முகவர்கள், சரக்கு கையாளும் முகவர்கள், போக்குவரத்து மற்றும் ஏற்றுமதியாளர்கள், துறைமுக அதிகாரிகள், ஊழியர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் வருங்காலங்களிலும் காற்றாலை ஏற்றுமதியில் மேம்பட்ட செயல்திறனை அடைய கடினமாக உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

  • Share on

பிளாஸ்டிக் ஒழிப்பு தீவிரமாகட்டும் - பனை ஓலைக்கொட்டான் தயாரிப்பு புத்துணர்ச்சி பெறட்டும்!

திமுக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் ஹிந்தி இடம் பெற்றது எப்படி ? - முன்னாள் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கேள்வி!

  • Share on