• vilasalnews@gmail.com

தூத்துக்குடி பெண் குறுஞ்செய்தி மூலம் ஆன்லைனில் இழந்த ரூ1 லட்சம் மீட்பு!

  • Share on

தூத்துக்குடியை சேர்ந்த பெண் ஆன்லைனில் இழந்த ரூ 1 லட்சத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தூத்துக்குடியை சேர்ந்தவர் ஜெபக்குமார். இவருடைய மனைவி ஆனந்தி. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருடைய செல்போன் எண்ணுக்கு வங்கி தொடர்பாக ஒரு குறுஞ்செய்தி வந்து உள்ளது. அதனை பார்த்த ஆனந்தி, அந்த குறுஞ்செய்தியில் இருந்த ஆன்லைன் இணைப்பில் சென்று தனது வங்கி கணக்கு குறித்த தகவல்களை பதிவு செய்து உள்ளார். சிறிது நேரத்தில் அவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் பணம் மோசடியாக எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆனந்தி தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் தெரிவித்தார்.

புகாரின் பேரில் கூடுதல்  காவல் கண்காணிப்பாளர் இளங்கோவன் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் சுதாகர் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆனந்தியின் வங்கி கணக்கில் இருந்து பணம், பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு பரிமாற்றம் செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் பிளிப்கார்ட் நிறுவன அதிகாரியை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவித்தனர். தொடர்ந்து பணத்தை மீண்டும் ஆனந்தியின் வங்கி கணக்குக்கு அனுப்ப அறிவுறுத்தினர். இதனால் பிளிப்கார்ட் நிறுவனத்தில் இருந்து மீண்டும் ரூ.1 லட்சம் பணம் ஆனந்தியின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இதனால் இழந்த பணம் முழுமையாக மீட்கப்பட்டது.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கூறும் போது, பொதுமக்கள் தங்கள் செல்போனுக்கு வரும் தேவை இல்லாத லிங்குகளை திறக்க வேண்டாம் என்றும், வங்கி கணக்கு விவரங்களை தெரிவிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

  • Share on

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து : 44 பேர் கைது!

இறந்தவருக்கு தடுப்பூசி செலுத்தியதாக வந்த குறுஞ்செய்தி : குடும்பத்தினர் அதிர்ச்சி!

  • Share on