• vilasalnews@gmail.com

கோவில்பட்டியில் வழிமறித்து தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

  • Share on

கோவில்பட்டியில் வழிமறித்து தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார்  உத்தரவின்பேரில் கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன்  மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சபாபதி தலைமையிலான போலீசார் நேற்று (01.01.2022) ரோந்து பணியில் ஈடுபட்ட போது கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பட்டி, தியேட்டர் ரோடு, காளியம்மன் கோவில் அருகே சந்தேகத்துக்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த  கோவில்பட்டி சாஸ்திரி நகர், சண்முகராஜ் என்பவரது மகன் சரவணன் (வயது 21) என்பவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒரு நபரிடம் வழிமறித்து தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் அவரை கைது செய்தனர்.

இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி கைது செய்யப்பட்ட  சரவணன் என்பவர் மீது ஏற்கனவே கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Share on

தூத்துக்குடியில் திமுகவில் இருந்து விலகி தன்னை அதிமுகவில் இணைத்து கொண்ட மாணவரணி நிர்வாகி

தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை மாதாந்திர கூட்டம்!

  • Share on