• vilasalnews@gmail.com

விளாத்திகுளம் அருகே பஞ்சாயத்து தலைவரை தாக்கிய அண்ணன்-தம்பி கைது!

  • Share on

விளாத்திகுளம் அருகே பஞ்சாயத்து தலைவரை தாக்கியதாக அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது :

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள கே.சுந்தரேஸ்வர புரத்தைச் சேர்ந்தவர் சோலையப்பன் மகன் போஸ் (58). இவர் கே.சுந்தரேஸ்வர புரம் பஞ்சாயத்து தலைவராக உள்ளார். அப்பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்துள்ளது. இதனால் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் வடிகால்களை ஜேசிபி மூலம் சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. 

இந்நிலையில், அதே கிராமம் வடக்குத் தெருவைச் சேர்ந்த சக்திவேல் மகன் செந்தில்குமார் (41) என்பவர் தனது வீட்டின் முன் சரள் மண் குவித்து வைத்திருந்தாராம். அதனை அப்புறப்படுத்த முயன்றபோது அவர் பஞ்சாயத்து தலைவரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் செந்தில்குமார் மற்றும் அவரது அண்ணன் கருங்கதுரை (45) ஆகிய இருவரும் பஞ்சாயத்து தலைவர் போஸை இரும்பு கம்பியால் தாக்கினார்களாம். 

இதனால் ஆத்திரம் அடைந்த பஞ்சாயத்து தலைவரின் மகன் கார்த்திக் (22) என்பவர், செந்தில்குமாரை கம்பால் தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த அவர்கள் இருவரும் விளாத்திகுளம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இது தொடர்பாக விளாத்திகுளம் சப் இன்ஸ்பெக்டர் தேவராஜ் வழக்குப் பதிந்து, செந்தில்குமார், கருங்கதுரை ஆகிய 2பேரையும் கைது செய்தார். இதுபோல் செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில் கார்த்திக்கை போலீசார் கைது செய்துள்ளனர். 

  • Share on

அமைச்சர் கீதாஜீவனுடன் த.வீ.க.ப.க நிர்வாகிகள் சந்திப்பு!

திருச்செந்தூர் கோவிலில் தரிசன நேரம் அதிகரிப்பு - கோவில் நிர்வாகம் அறிவிப்பு!

  • Share on