• vilasalnews@gmail.com

அமைச்சர் கீதாஜீவனுடன் த.வீ.க.ப.க நிர்வாகிகள் சந்திப்பு!

  • Share on

சென்னையில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்று, தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவனை தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுகழக நிர்வாகிகள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

தமிழக சட்டப்பேரவையின் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது செய்தித்துறை (செய்தி மற்றும் விளம்பரம்) மானியக் கோரிக்கையின் போது, அமைச்சர் சாமிநாதன் பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில், தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் உட்பட வீரபாண்டிய கட்டபொம்மன் வம்சாவழியினர், தேசப் பற்றாளர்கள், பல்வேறு அமைப்பினர் உள்ளிட்டோர், நீண்டகாலமாக தலைநகர் சென்னையில் இந்திய விடுதலை போருக்கு முதல்முழக்கமிட்ட வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை அமைக்கப்பட வேண்டும் என தொடர் கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில்,  செய்தித் துறை மானியக் கோரிக்கையின் போது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசானது, இந்திய ஏகாதிபத்தியத் தை எதிர்த்து முதல் சுதந்திர போராட்ட மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களுக்கு தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள கிண்டி வளாகத்தில் முழு திரு உருவ சிலை அமைக்கவும், தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் கோட்டையில் மாணவ- மாணவியர்கள், கட்டபொம்மன் வரலாற்றை தெரிந்து கொள்ளும் வகையில் ஒலி-ஒளி அமைக்கவும், திருப்பூர் உடுமலை பகுதியில் தளி பாளையக்காரர் எத்திலிப்ப நாயக்கருக்கு முழு திருவுருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கவும், அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கும், கோரிக்கைகளை  அரசின் கவனத்திற்கு எடுத்துச்சென்றவர்களின் ஒருவரான சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவனை, தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுகழக மாவட்ட தலைவர் "வலசை" கண்ணன் தலைமையில் நிர்வாகிகள் ராமலிங்கம், மல்லுச்சாமி உள்ளிட்டோர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

மேலும், வருகிற அக்டோர் 16 ஆம் தேதி, கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவிடத்தில் நடைபெறும் அவரது நினைவு நாள் புகழஞ்சலி விழாவிற்கு வருகை தர, அமைச்சர் கீதாஜீவனுக்கு தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுகழகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

  • Share on

தூத்துக்குடியில் கந்துவட்டி கேட்டு பெண்ணை மிரட்டியவர் கைது!

விளாத்திகுளம் அருகே பஞ்சாயத்து தலைவரை தாக்கிய அண்ணன்-தம்பி கைது!

  • Share on