
உடுமலைப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட கஞ்சம்பட்டி ஊராட்சி அரசு மேல்நிலை பள்ளியில் முன்னாள் அமைச்சரும், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ மாணவ மாணவிகளுக்கு கண் கண்ணாடி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சோமசுந்தரம், பெற்றோர் ஆசிரியர் கழகம் தலைவர் சௌந்தரராஜன், மாவட்ட விவசாய அணி பொருளாளர் பாலச்சந்தர், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முருகசாமி, சுப்பிரமணி, செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.