• vilasalnews@gmail.com

ஆபாச வீடியோக்களில் உள்ள பெண்கள் யார்? இதுபோல எத்தனை குடும்பத்தை சாமியார் சீரழித்திருக்கிறார்?

  • Share on

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ஒருவர் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார்.


இவருக்குத் திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவருடைய வீட்டின் அருகே, ஓர் அய்யனார் கோவில் உள்ளது. அதில், சேலம் போயர் தெருவைச் சேர்ந்த முத்தையன் என்பவர் அடிக்கடி வந்து வழிபட்டு செல்வார். அது மட்டுமில்லாமல் பில்லி, சூனியம் எடுப்பது, பெண்களை வசியம் செய்வது உள்ளிட்ட வேலைகளையும் சாமியார் வேடம் அணிந்து முத்தையன் செய்வார் என கூறப்படுகிறது.


இந்த நிலையில், ஓட்டுநருக்கும், முத்தையனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது ஓட்டுநருக்கு பண நெருக்கடி ஏற்பட்டது. இதனால் தனது 50 சென்ட் நிலத்தை 4 லட்சத்திற்கு முத்தையனிடம் ஓட்டுநர் கிரையம் செய்து கொடுத்துள்ளார்.


இதனால், நாளடைவில் ஓட்டுநரின் குடும்பத்தினருடன் முத்தையனுக்கு பழக்கம் அதிகமானது. அந்தப் பழக்கத்தால் நாளடைவில் ஓட்டுநரின் மனைவிக்கும், முத்தையனுக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளதாம். இந்த விஷயம் ஓட்டுநருக்கு தெரியவரவே 2 பேரையும் அழைத்து எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு மேல் முத்தையனுடன் பழக்கம் வைத்திருந்தால் நம் குடும்பத்திற்கு ஆபத்து ஏற்படும் என கருதிய ஓட்டுநர், சாமியார் முத்தையனுக்கு தரவேண்டிய பணத்தை வட்டியுடன் தயார் செய்து கொடுத்து விட்டு தனது நிலத்தைத் திரும்ப தர வேண்டும் எனக் கூறியுள்ளார்.


இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முத்தையன், உனது நிலத்தைத் திருப்பி கேட்டால் உன் மனைவியுடன் நான் ஆபாசமாக இருந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என கூறி மிரட்டி உள்ளார்.


இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் சின்னசேலம் காவல்துறையில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சின்னசேலம் காவல்துறையினர் முத்தையனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. 


முத்தையனின் லேப்டாப்பை காவல்துறையினர் சோதனை செய்ததில், அதில் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த 50க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருந்துள்ளது.


மேலும் அவரிடம் இருந்த 5 செல்போன்கள், ஒரு லேப்டாப், 5 பென்டிரைவ் உள்ளிட்டவைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து முத்தையனை காவல்துறையினர் கைது செய்து, கள்ளக்குறிச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.


நில விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட டிரைவர் புகாரை தரப்போய், சாமியாரின் மற்ற சுயரூபங்கள் வெளியே தெரியவந்துள்ளது. இல்லாவிட்டால், மேலும் பல பெண்களை சாமியார் நாசம் செய்திருக்கக்கூடும் என்கிறார்கள். ஆபாச வீடியோக்களில் உள்ள பெண்கள் யார்? இன்னும் இதுபோல எத்தனை குடும்பத்தை சாமியார் சீரழித்திருக்கிறார்? என்ற விவரங்களை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

  • Share on

திருச்சி அருகே லாரியில் ரூ.50 லட்சம் திருட்டு : தூத்துக்குடியைச் சேர்ந்த 2 பேர் உட்பட 5 பேர் கைது | போலீசார் பிடிக்க முயன்ற போது, தப்பியோட முயன்ற மூவருக்கு காலில் எலும்பு முறிவு!

மாநில அரசியலுக்கு வருகிறாரா கனிமொழி?

  • Share on