• vilasalnews@gmail.com

மீண்டும் சூடுபிடிக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு!

  • Share on

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 5 பேரை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நடுவர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. சிறையிலுள்ள பொன்னை பாலு, அருள், ராமு, ஹரிதரன் மற்றும் சிவசக்தியை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், பூந்தமல்லி கிளை சிறையில் இருந்து 5 பேரும் போலீஸ் காவலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.


பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5-ஆம் தேதி மாலை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டுக்கு அருகே கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக செம்பியம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


அதில், முதல் கட்டமாக கடந்த கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு மற்றும் அவரது கூட்டாளி திருவேங்கடம் உட்பட 8 பேர் அன்று இரவே கைது செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து, அடுத்தடுத்து 13 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கில் திமுக, அதிமுக, பாஜக உட்பட பல்வேறு முன்னாள் கட்சி பிரமுகர்கள் உட்பட தற்போது வரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி போலீஸ் கஸ்டடியில் இருந்த திருவேங்கடம் போலீசாரின் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்தடுத்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் கொலைக்கு மூளையாக செயல்பட்டவர் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது மட்டும் இதுவரை வெளியாகவில்லை.


இந்த நிலையில், இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக கொலையாளிகளை இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். முன்னதாக, குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க செம்பியம் போலீசார் அனுமதி கோரினர். சிறையில் உள்ள பொன்னை பாலு, அருள், ராமு, ஹரிதரன் மற்றும் சிவசக்தி ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நடுவர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.


இவர்கள் 5 பேரையும் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீசன் அனுமதி வழங்கினார். இதைத்தொடர்ந்து, பூந்தமல்லி கிளை சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 5 பேரும் போலீஸ் காவலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.


ஏற்கனவே பொன்னை பாலு, அருள் உள்ளிட்டோர் 2 முறை போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து பலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், மீண்டும் அவர்கள் 7 நாள் போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரிக்கப்பட இருப்பதால் மேலும் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Share on

நாளை ( ஆக.,3 ) அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களும் வழக்கம்போல் செயல்படும்... ஏன் தெரியுமா?

திமுக தலைமைக்கு தொல்லையாகும் நெல்லை... ஸ்டாலின் உத்தரவையே மீறிய திமுக கவுன்சிலர்கள்... நெல்லையில் மீண்டும் தலைவலி!

  • Share on