• vilasalnews@gmail.com

நாளை ( ஆக.,3 ) அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களும் வழக்கம்போல் செயல்படும்... ஏன் தெரியுமா?

  • Share on

ஆடிப்பெருக்கை முன்னிட்டு நாளை அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களும் வழக்கம்போல் செயல்படும் என பதிவுத்துறை அறிவித்துள்ளது.

பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவிக்கையில்:-

அசையா சொத்துக்கள் குறித்த பத்திரப்பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள மக்கள் விரும்புகின்றனர். இதனால் ஆடிப்பெருக்கு கொண்டாடுவதை ஒட்டி நாளை ( 3 ம் தேதி ) அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களும் வழக்கம்போல் செயல்படும். காலை 10 மணி முதல் பத்திரப்பதிவு பணிகளை மேற்கொள்ள வேண்டும். விடுமுறை நாளில் பத்திரப்பதிவு மேற்கொள்வதற்கான கூட்டுல் கட்டணத்தை சேர்த்து வசூலிக்க சார் பதிவாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பை அளிக்க சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. என தெரிவித்துள்ளார்.

  • Share on

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார கணக்கெடுப்பு பணி

மீண்டும் சூடுபிடிக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு!

  • Share on