• vilasalnews@gmail.com

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு விரைவில் மூடு விழா... இமக ஆரூடம்!

  • Share on

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு விரைவில் மூடு விழா நடத்தப்படும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். மேலும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் வரிசையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் மாறப்போகிறது என்றும் வெகுவிரைவில் திமுகவின் பிராண்ட் அம்பாசிடராக நடிகர் விஜய் மாறுவார் என்றும் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக்கழகத் தலைவரும் நடிகருமான விஜய், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு நேற்று இரண்டாவது கட்டமாக விருது வழங்கினார். அப்போது, நீட் தேர்வுக்கு எதிராக கருத்துக்களை கூறினார். மேலும் திமுக தலைவர்களை போல, மத்திய அரசை ஒன்றிய அரசு என்றும் குறிப்பிட்டார்.


விஜய்யின் இந்த பேச்சுக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். அந்த வகையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் விஜய்யை விளாசி சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், ஜோசப் விஜய்யின் அரசியல் வெகு விரைவில் முடிவுக்கு வரும் என்று நினைக்க தோன்றுகிறது என குறிப்பிட்டுள்ள அர்ஜூன் சம்பத், விஜய்யின் நடவடிக்கையில் கடந்த வாரம் மற்றும் தற்போதுள்ள மாற்றங்கள் குறித்து பட்டியலிட்டுள்ளார்.

அதன்படி, "ஜோசப் விஜய் - அரசியல்

போன வாரம் - நெற்றியில் குங்குமம்

இந்த வாரம் - நெற்றியில் சுத்தம்

போன வாரம் - ஆன்மீக அரசியல்

இந்த வாரம் - திராவிட அரசியல்

போன வாரம் - போதைக்கு எதிர்ப்பு

இந்த வாரம் - நீட் க்கு எதிர்ப்பு

போன வாரம் - திமுக எதிர்ப்பு

இந்த வாரம் - பாஜக வுக்கு எதிர்ப்பு

போன வாரம் - கொள்கை இல்லை

இந்த வாரம் - கொள்கையே இல்லை

போன வாரம் - வேற வாய்

இந்த வாரம் - நாற வாய்

போன வாரம் - நடிகர் விஜய்

இந்த வாரம் - ஜோசப் விஜய்

ஜோசப் விஜய் அவர்கள் ஒரு வாரத்தில் இவ்வளவு முரண்பாடுகள் ஏன்? இந்த மாற்றம் பல செய்திகள் காதில் விழுகிறது. நான் போன வாரமே சொன்னேன் நீங்கள் அரசியல் கட்சி தொடங்கி விட்டீர்கள் இனி அரசியல் செய்ய வேண்டும். உங்கள் சித்தாந்தம் கொள்கை தெரிந்தால் உங்களை அரசியல் கட்சிகள் எதிர்க்க தொடங்கும்.

திமுகவும் இமகவும் உங்களை கடுமையாக எதிர்க்கும். அந்த அரசியலை எதிர்த்து நீங்கள் களத்தில் நிற்க முடியுமா என்று சொன்னேன். ஒரு வாரத்தில் ஜோசப் விஜய் அவர்களின் நடவடிக்கைகளின் மாற்றங்கள் முரண்பாடுகள் பார்த்தால் வெகு விரைவில் நடிகர் ஜோசப் விஜய் அவர்களின் தவெக மூடு விழா நடைபெறும் என நினைக்கிறோம். நாங்க அரசியலில் எம்.ஜி.ஆர் அவர்களையும் பார்த்து விட்டோம். அம்மையார் ஜெயலலிதா அவர்களையும் பார்த்து விட்டோம்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை பார்த்து விட்டோம். நவரச நடிகர் டி. ராஜேந்தர் அவர்களை பார்த்து விட்டோம். இயக்குனர் பாக்யராஜ் அவர்களை பார்த்து விட்டோம். கேப்டன் விஜயகாந்த் அவர்களை பார்த்து விட்டோம். உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களை பார்த்து விட்டோம். இதோ தொடங்க போகிறேன் இப்போ தொடங்குகிறேன் என்று சொன்ன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை பார்த்து விட்டோம். இவ்வளவு பேரை பார்த்த எங்களுக்கு நீங்கலெல்லாம் சுண்டைக்காய். அரசியல் என்றால் விளையாட்டாக போச்சு. அதிலும் முதலமைச்சர் என்ற சொல் உங்களுக்கு எல்லாம் நகைச்சுவையாக இருக்கிறது.

அரசியல் என்பது மக்களுக்கு சேவை செய்வது. அதற்கு போராட வேண்டும் சிறை செல்ல வேண்டும் வந்தவுடன் மக்கள் முதலமைச்சர் பதவியை தூக்கி கொடுக்க மாட்டாங்க. இனி தமிழகத்தில் எந்த நடிகரும் அரசியலுக்கு வர வேண்டும் என்று எண்ணம் வரவே கூடாது. கமலஹாசனின் மக்கள் நீதி மையம் வரிசையில், நடிகர் ஜோசப் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் மாறப்போகிறது. திமுகவின் ஊது குழலாக தமிழக வெற்றிக் கழகம் உருவாகிவிட்டது. வெகுவிரைவில் திமுகவின் பிராண்ட் அம்பாசிடராக விஜய் மாறுவார்.

அப்பொழுதுதான் அவருடைய கோட் படம் ரிலீஸ் ஆகும். இல்லையென்றால் விஜய்க்கு பலவித நிர்பந்தங்களை திராவிட மாடல் அரசு ஏற்படுத்தும். இப்பொழுதே, அத்தகைய நிர்பந்தங்களை ஏற்படுத்த துவங்கி விட்டார்கள். எனவேதான் ஜோசப் விஜயின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிகிறது. ஜோசப் விஜய்யை நம்பி தமிழக வெற்றிக் கழகத்தில் உள்ள ஜோசப் விஜய் ரசிகர்கள் ஏமாந்து விட வேண்டாம் இவ்வாறு அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

  • Share on

ஒரே நாளில் அடுத்தடுத்து 2 மேயர்கள் ராஜினாமா.. அமைச்சரிடம் இருந்து போன அந்த ரிப்போர்ட் தான் காரணமா?

கைலாசா நாடு எங்கிருக்கிறது? நித்யானந்தா அறிவிப்பு!

  • Share on