• vilasalnews@gmail.com

விஜயகாந்த் யார்? ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் பெற்ற மோடி சொன்ன அந்த வார்த்தை!

  • Share on

திருச்சி வந்த பிரதமர் மோடி இன்று மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் குறித்து பேசியது கவனம் பெற்றுள்ளது.

திருச்சியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அதில், 2024-ம் ஆண்டின் நான் பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி. தமிழ்நாடு முன்னேற்றத்துக்கு ரூ20,000 கோடி திட்டங்கள் தொடக்கம். எனது தமிழ் குடும்பமே முதலில் உங்கள் அனைவருக்கும் 2024 புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

2023-ல் மழை வெள்ளத்தால் தமிழ்நாட்டில் பலர் உயிரிழந்தனர். 2023-ல் மழை வெள்ளத்தால் தமிழ்நாட்டில் பெரும் சேதம் ஏற்பட்டது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருந்தது.

விஜயகாந்த் சில நாட்களுக்கு முன்னர் காலமானார். சினிமாவில் மட்டும் கேப்டன் விஜயகாந்த் அல்ல அரசியலிலும் கேப்டன். தேசத்தை அதிகம் நேசித்தவர் விஜயகாந்த். விஜயகாந்த் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்.  என பிரதமர் மோடி பேசினார்.

  • Share on

சென்னை வியாபாரிகளை தென் தமிழகத்தில் இருந்து வந்த ஒரு சராசரி மனிதர்களாக பார்த்துவிடாதீர்கள்... குரல் கொடுக்கும் ராக்கெட் ராஜா

வடிவேலு மூஞ்சில கரியை பூசிய பிரதமர் மோடி... வடிவேலுவை வச்சு செய்ய ஆரம்பிச்ச நெட்டிசன்கள்!

  • Share on