“தமிழகத்தில் கொரோனா இறப்புகளை மறைக்கவில்லை” : அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நிருபர்
May 25, 2021
“தமிழகத்தில் கொரோனா இறப்புகளை மறைக்கவில்லை” : அமைச்சர் மா.சுப்பிரமணியன்
<p><b>தமிழகத்தில் கொரோனா இறப்புகளை மறைக்கவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.</b><br></p><p>தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 34,867 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18லட்சத்து 77ஆயிரத்து 211ஆக உயர்ந்துள்ளது. </p><p>நேற்று ஒரேநாளில் 404பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 20,872ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் இதுவரை கொரோனாவிலிருந்து 15,54,759பேர் குணமாகியுள்ளனர்.</p><p>இந்நிலையில் <b>தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் :</b></p><p> 10 நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் இக்கட்டான நிலை இருந்தது. ஆனால், முதல்வர் எடுத்த நடவடிக்கைகளால் தற்போது ஆக்சிஜன் போதுமான அளவு கையிருப்பு உள்ளது.</p><p>தமிழகத்தில் இறப்பு எண்ணிக்கையை மறைக்கவில்லை. இன்னும் 2 நாட்களில் 10 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைத்து கருப்பு பூஞ்சை குறித்து ஆய்வு செய்யப்படும் என்றார்.</p>