"தமிழகத்தில் 9 பேருக்கு கருப்பு பூஞ்சை" உயிர் பலி இல்லை!
நிருபர்
May 20, 2021
"தமிழகத்தில் 9 பேருக்கு கருப்பு பூஞ்சை" உயிர் பலி இல்லை!
<p dir="ltr"></p><div align="left"><p dir="ltr"><b>கருப்பு பூஞ்சை பாதிப்பை கண்டு மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.</b><br></p></div><div align="left"><p dir="ltr">
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30ஆயிரத்தை கடந்து வருகிறது. அத்துடன் கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களை <a href="https://www.toptamilnews.com/tag/mucormycosis/">கருப்புபூஞ்சை</a> (மியூகோர் மைகோசிஸ்) என்ற புதிய தொற்று தாக்குவதாக தெரிகிறது. இதனால் டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உயர்பலிகளும் நிகழ்ந்துள்ளது. </p><p dir="ltr">அத்துடன் தமிழகத்தை பொறுத்தவரை சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில் 9 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் கோவில்பட்டியில் ஒருவர் கொரோனாவில் இருந்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகின.</p>
<p dir="ltr">இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கருப்பு பூஞ்சை பாதிப்பை கண்டு மக்கள் அச்சப்பட தேவையில்லை. கருப்பு பூஞ்சை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் கருப்பு பூஞ்சை நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்கப் படவேண்டும். </p><p dir="ltr">இது புதிதாக உருவான தொற்று பாதிப்பு அல்ல. கருப்பு பூஞ்சை பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 9 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் ஏற்பட்டுள்ளது. சர்க்கரை நோயாளிகள் 7 பேர் உள்பட 9 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் உண்டாகியுள்ளது. அனைவரும் நலமுடன் உள்ளனர்” என்றார்.</p></div>