<p><b>தூத்துக்குடியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி தேர்தல் காரியாலயம் திறக்கப்பட்டது.</b></p><p><br></p><p>தமிழக சட்டசபைக்கு இம்மாதம் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என்ற நான்கு முனை போட்டி நிலவுகிறது.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2026/04/05/11775395975.jpg" style="width: 100%;"><br></p><p>இதில் தூத்துக்குடி சட்டசபை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் போட்டியிருக்கிறார். இந்த நிலையில், தூத்துக்குடி எஸ்ஏவி பள்ளி மைதானம் எதிரில், இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தேர்தல் காரியாலயம் திறக்கப்பட்டது.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2026/04/05/11775395802.jpg" style="width: 100%;"><br></p><p>இதில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.</p>