<p><b>தூத்துக்குடி அருகேயுள்ள புதூர் பாண்டியாபுரம் பகுதியில், மக்கள் நடமாட்டம் மிகுந்த குடியிருப்பிற்குள் சாரைப்பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</b></p><p><br></p><p>புதூர் பாண்டியாபுரம் கிராமத்தின் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பொன்செல்வம். இன்று இவரது வீட்டின் சமையலறைக்குள் எதிர்பாராத விதமாக சுமார் 6 அடி நீளம் கொண்ட பெரிய சாரைப்பாம்பு ஒன்று நுழைந்தது.&nbsp; வீட்டை விட்டு வெளியேறிய குடும்பத்தினர்,&nbsp; உடனடியாக வீட்டின் கதவைப் பூட்டி பாதுகாப்பாக நின்றனர்.</p><p><br></p><p>இது குறித்து உடனடியாக சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில்,&nbsp; தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, உபகரணங்களைப் பயன்படுத்தி அந்தப் பாம்பைப் பாதுகாப்பாக மீட்டனர். பிடிபட்ட பாம்பு குடியிருப்புப் பகுதியிலிருந்து அகற்றப்பட்டு, அருகிலுள்ள வனப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டது.</p><p><br></p><p>பாம்பைப் பிடித்து உயிர்ச் சேதம் ஏதுமின்றி மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு, பொன்செல்வத்தின் குடும்பத்தினரும் அப்பகுதி பொதுமக்களும் தங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் நிலவிய பதற்றம் தணிந்து, மக்கள் நிம்மதியடைந்தனர்.</p>