<p><b>நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைந்தால்&nbsp;</b><b>அரசு பள்ளியில் படிக்கும் அனைவருக்கும் அரசு வேலை என&nbsp;</b><b>அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்குறுதி அளித்துள்ளார்</b>.</p><p>சட்டப்பேரவைத் தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் சீமான், தனது தொகுதியில் முதல் நாள் பரப்புரையில் ஈடுபட்டார். </p><p>திருவொற்றியூர் தேரடி, பர்மா காலனி, தல்லா குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.<br></p><p>அப்போது அவர் பேசுகையில், நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைந்தால் மக்களின் வாங்கும் திறனை உயர்த்தப்போவதாகவும், அரசுப்பள்ளியில் பயிலும் அனைவருக்கும் அரசு வேலை என்ற நிலையை உருவாக்கப் போவதாகவும் சீமான் உறுதியளித்தார். </p><p>இலவசங்களையும் கவர்ச்சித் திட்டங்களையும் கூறி மக்களை ஏமாற்ற தயாராக இல்லை என்றும் சீமான் கூறினார்.<br></p>