பொங்கல் பண்டிகை : தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
நிருபர்
January 07, 2026
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி - சென்னை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
<p><b>பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி - சென்னை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.</b></p><p><br></p><p>பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பயணிகள் கூடுதல் நெரிசலை குறைக்கும் வகையில் தெற்கு ரயில்வே சார்பில் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி,</p><p><br></p><p>சென்னை சென்டிரலில் இருந்து தூத்துக்குடி செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06151) வருகிற 12 மற்றும் 19ம் தேதிகளில் (திங்கட்கிழமைகளில்) சென்னை சென்டிரலில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் மதியம் 12.15 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும்.</p><p><br></p><p>மறுமார்க்கத்தில், தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்டிரல் செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06152) வருகிற 13 மற்றும் 20ம் தேதிகளில் (செவ்வாய்க்கிழமை) தூத்துக்குடியில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 9.45 மணிக்கு சென்னை சென்டிரல் வந்து சேரும்.</p>