’’விடைபெறுகிறேன்; என் கண்ணீர் என்னை நாணமுறவைக்கிறது’’
நிருபர்
March 09, 2021
’’விடைபெறுகிறேன்; என் கண்ணீர் என்னை நாணமுறவைக்கிறது’’
<p>திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில ஆலோசகரும், கவிஞரும், எழுத்தாளுமான மனுஷ்யபுத்திரன், திமுகவுக்கு ஆதரவாக கடந்த தேர்தல்களில் தீவிர பிரச்சாரம் செய்து வந்தார். திமுகவுக்கு ஆதரவாக விவாதங்களிலும் பங்கேற்று வந்தவர் மனுஷ்யபுத்திரன்.<br></p><p>அவர் இன்று 9.3.2021 காலை 7.55 மணிக்கு,<br></p><p>’’விடைபெறுகிறேன்</p><p>என் கண்ணீர் என்னை</p><p>நாணமுறவைக்கிறது’’ என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2021/03/09/11615267481.jpg" title="Vilasal news" style="width: 100%;"><br></p><p>திமுகவில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு முடிந்து, விருப்பமனு கொடுத்தவர்களுடன் நேர்காணல் நடந்து முடிந்து, திமுகவின் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்பட இருக்கிறது.<br></p><p>இந்நிலையில்,திமுகவில் சீட்டு கேட்டு கிடைக்காத விரக்தியில் அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளதாக பலரும் சொல்லி வருகின்றனர். அதாவது சீட்டு கிடைக்காத காரணத்தினால் திமுகவில் இருந்து வெளியேறுகிறார் என்றே சொல்லி வருகின்றனர்.<br></p>