<p><b>தூத்துக்குடி மாநகராட்சி 8 வது வார்டுக்குட்பட்ட தவெக தொண்டர் அமலன் என்பவரது படகு கடந்த சில நாட்களுக்கு முன்பு பழுதாகி கடலில் மூழ்கி முழுவதுமாக சேதமடைந்தது.</b></p><p><br></p><p>இதில், அதிஷ்டவசமாக படகில் பயணம் செய்த அனைவரும் பத்திரமாக வீடு திரும்பினர். ஆனால், படகு முழுவதுமாக சேதம் அடைந்தது. இதனையடுத்து சேதமடைந்த&nbsp; படகையும், படகில் பயணம் செய்து கரை திரும்பியவர்களையும், தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் 23.07.2025 அன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.</p><p><br></p><p>இந்நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகளிடமிருந்து எந்த ஒரு உதவியும் கிடைக்கப் பெறாத நிலையில், அப்பகுதி தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் வேண்டுகோளுக்கிணங்க, திரேஸ்புரம் வடபாகம் நாட்டுப் படகு மீனவர் பொது பஞ்சாயத்தார்கள் முன்னிலையில்,</p><p><br></p><p>தூத்துக்குடி மத்திய மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், நேரில் சந்தித்து, நிதி உதவியை தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் வழங்கினார். இந்நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகிகள், தொண்டர்கள், உடன் இருந்தனர்.</p>