தூத்துக்குடியில் 1 கிலோ 300 கிராம் கஞ்சாவுடன் 4 பேர் கைது!
நிருபர்
March 26, 2025
தூத்துக்குடியில் 1 கிலோ 300 கிராம் கஞ்சாவுடன் 4 பேர் கைது!
<p><b>தூத்துக்குடி மதுவிலக்கு தனி படை காவல் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி வடக்கு பீச் ரோடு பூங்கா அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.</b></p><p><br></p><p>அப்போது, இரண்டு பைக்குகளில் வந்த நான்கு பேரை சந்தகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தனர். அப்போது, அவர்களிடம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி கீதாஜீவன் நகரைச் சேர்ந்த ரஞ்சித் மகன் சக்திவேல் ( 22 ), 3 சென்ட் அந்தோனியார் புரத்தைச் சேர்ந்த ரவிக்குமார் மகன் அருண்குமார் ( 19 ), புண்ணியகோடி மகன் பூவை மூர்த்தி வினோ ( 21 ), முத்துகிருஷ்ணாபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த பழனிசாமி மகன் சௌந்தரபாண்டியன் ( 21 ) என்பதும் தெரியவந்தது. </p><p><br></p><p>இதனையடுத்து நான்கு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சா மற்றும் இரண்டு பைக்குகள், நான்கு செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். இதில் தப்பி ஓடிய கபிலன் என்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.</p>