<p><b>டாஸ்மாக்கில் முறைகேடு நடந்துள்ளது என்றும், ரூ.1000 கோடிக்கும் அதிக அளவில் ஊழல் நடந்துள்ளது என்றும், அதிகாரிகள் - நிறுவனங்கள் இடையே நேரடி தொடர்பு, டாஸ்மாக் உயர் அதிகாரிகளின் நெருக்கமானவர்களுக்கே ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அமலாக்கத்துறை பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.&nbsp;</b></p><p><br></p><p>அதில் என்னென்ன குற்றச்சாட்டுகள் என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><br></p><p>மதுபானம் கொள்முதல் மூலம் தனியார் மதுபான நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளன.</p><p><br></p><p>டாஸ்மாக் உயர் அதிகாரிகள் மற்றும் மதுபான நிறுவனங்கள் இடையே நேரடி தொடர்பு இருந்ததற்கான ஆதாரம் சிக்கியுள்ளது.</p><p><br></p><p>டாஸ்மாக் உயர் அதிகாரிகளின் நெருக்கமானவர்களுக்கே ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.</p><p><br></p><p>பார் உரிமங்கள் வழங்குவதிலும், இதற்கான ஒப்பந்தங்களிலும் தவறு நடந்துள்ளது.</p><p><br></p><p>திட்டமிட்டு செலவுகளை அதிகப்படுத்தியும், விற்பனை புள்ளி விவரங்களை உயர்த்தியும் முறைகேடு நடந்துள்ளது.</p><p><br></p><p>உரிய ஆவணங்கள் இல்லாத நிறுவனங்களுக்கு டெண்டர் ஒதுக்கபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p><br></p><p>முறையான கேஒய்சி, பான் விவரங்கள் இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு கூட டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.</p><p><br></p><p>போக்குவரத்து, கட்டடம் உட்கட்டமைப்பு ஆகியவற்றிலும் ஊழல் நடந்துள்ளது</p><p><br></p><p>ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பல எஃப் ஐ ஆர் பதியப்பட்டதன் அடிப்படையில் டாஸ்மாக்கில் விசாரணை நடைபெறுகிறது.</p><p><br></p><p>முறைகேட்டில் மதுபான தயாரிப்பு நிறுவனங்கள், பிற முக்கிய கூட்டாளிகள் பங்கு குறித்து விசாரனை நடைபெற்று வருகிறது.</p>