<div align="left"><p dir="ltr"><b>தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறிய அளவிலான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மார்ச் 14ஆம் தேதி நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.</b></p> </div><p dir="ltr"><br><b><font color="#ce0000"> இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:</font></b></p><p dir="ltr"><b><font color="#ce0000"> </font></b><br></p><p dir="ltr">தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்பெறும் வகையில் மாா்ச் மாதத்திற்கான சிறிய அளவிலான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை மார்ச் 14ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.</p><p dir="ltr"><br></p><div align="left"><p dir="ltr">இம்முகாமில், வேலையளிக்கும் தனியாா் நிறுவன பிரதிநிதிகள் தங்கள் நிறுவனத்திற்கு தேவையான பணியாளா்களை தோ்வு செய்ய இம்முகாமில் கலந்து கொள்ளலாம். 10ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.இ., டிப்ளமோ, ஐடிஐ, ஓட்டுநா், கணினி பயிற்சி உள்ளிட்ட கல்வித் தகுதியுடைய பதிவுதாரா்கள் பங்கேற்கலாம்.<br> </p> </div><p dir="ltr"><br> </p><p> <p dir="ltr"></p></p><div align="left"><p dir="ltr">தகுதியுள்ள, தனியாா்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவா்கள் தங்களது பயோடேட்டா மற்றும் கல்விச் சான்றிதழ்களுடன் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம் என அவா் தெரிவித்துள்ளாா்.<br> </p> </div>