தூத்துக்குடி மாவட்டத்தில் நிலங்களை அளவீடு செய்ய புது வழி!
நிருபர்
March 08, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் நிலங்களை அளவீடு செய்ய வட்டாட்சியா் அலுவலகம் செல்லாமல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.
<p><b>தூத்துக்குடி மாவட்டத்தில் நிலங்களை அளவீடு செய்ய வட்டாட்சியா் அலுவலகம் செல்லாமல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.</b></p><p><br></p><p>நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பத்தை சமர்பித்து வந்த நிலையில், தாலுகா அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், <a href="https://tamilnilam.tn.gov.in/citizen" target="_blank">https://tamilnilam.tn.gov.in/citizen</a> இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் 2023 ஆம் ஆண்டே தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.</p><p><br></p><p>இந்த வசதியை இ-சேவை மையங்கள் மூலம் பெற முடியும். நில உரிமையாளர்கள் இ-சேவை மையங்களை அணுகி தேவையான கட்டணங்களை செலுத்த வேண்டும். மேலும், அட்டவணைப்படுத்தப்பட்ட கணக்கெடுப்பு தேதி விண்ணப்பதாரருக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும்.</p><p><br></p><p>கணக்கெடுப்பு முடிந்ததும், நில உரிமையாளர் மற்றும் சர்வேயரின் கையொப்பத்துடன் அளவிடப்பட்ட நிலத்தின் வரைபடம் போர்ட்டலில் பதிவேற்றப்படும், பின்னர் விண்ணப்பதாரர் <a href="https://eservices.tn.gov.in" target="_blank">https://eservices.tn.gov.in</a> வலைதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.</p>