<p><b>வைப்பார் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியின் ஆண்டு விழா, பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சியுடன் கோலாகலமாக நடைப்பெற்றது.</b></p><p><br></p><p>தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா, வைப்பார் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில், பள்ளியின் தலைமை ஆசிரியர் சிலுவைமணி கிரேஸ்&nbsp; தலைமை தாங்கினார். பள்ளி ஆசிரியர் சிவசக்தி முன்னிலை வகித்தார்</p><p><br></p><p>விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு பொருட்கள் மற்றும் மாணவர்களுக்கு தேர்வுக்கு தேவையான கல்வி உபகரணப் பொருட்களை வைப்பார் வில்லாயுத முடையார் திருக்கோவில் அறக்கட்டளை சார்பாக அதன் தலைவர் ஹரிஹரன் வழங்கினார்.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2025/03/07/11741346387.jpg" style="width: 100%;"><br></p><p>இந்த நிகழ்ச்சியில், மாணவ, மாணவியரின் பெற்றோர்கள், கிராம பெரியவர்கள், கிராம பொதுமக்கள், பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>