<p><b>தூத்துக்குடி அருகே முள்ளக்காட்டில் முன்விரோதம் காரணமாக தொழிலாளி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.</b></p><p><br></p><p>தூத்துக்குடி அருகே முள்ளக்காடு முனியசாமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி மகன் ராஜா ( 45 ) கூலி தொழிலாளி. இவரது குடும்பத்திற்கும் எதிர் வீட்டில் குடியிருக்கும் ஜார்ஜ் மகன் சுரேஷ் ( 40 ) என்பவருக்கும் இடையே தண்ணீர் பிடிப்பதில் ஏற்கனவே தகராறு இருந்து வந்துள்ளது.</p><p><br></p><p>இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சுரேஷ் அரிவாளால் ராஜாவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ராஜா ரத்த வெள்ளத்தில் இறந்துள்ளார். இதையடுத்து சுரேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.</p><p><br></p><p>இது குறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் போலீசார் சுரேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய சுரேஷை தேடி வருகின்றனர்.</p>