தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு
நிருபர்
February 19, 2021
தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு
<p><b>தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் இன்று கருப்பு தினம் அனுசரித்து நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்</b>.<br></p><p>கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் - போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது. மோதல் நடந்த பிப்ரவரி 19ம் தேதியை தேசிய கருப்பு தினமாக வழக்கறிஞர்கள் அனுசரித்து வருகின்றனர்.</p><p> இதையொட்டி தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் இன்று கருப்பு தினம் அனுசரித்து பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடியில் 150 பெண்கள் உட்பட 700 வழக்கறிஞர்கள் இன்று பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.</p><p> இதுபோல் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வழக்கறிஞர்கள் இன்று ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். <br></p>