<p><b>ஆத்தூர் - முக்காணி பாலத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த தடையை மீறி ஓடிய பாஜகவினரை விரட்டி பிடித்து போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.&nbsp;</b>&nbsp;</p><p><br></p><p>தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சாலையில் ஏரல் அருகே முக்காணி தாமிரபரணி ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த உயர்மட்ட பாலம் கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் பழுதடைந்து. இதனால், வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாத லாயக்கற்ற நிலை பாலத்திற்கு ஏற்பட்டது.&nbsp;</p><p><br></p><p>இந்தநிலையில், இந்த பாலம் பழுதடைந்து ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்காத ஆளும் திமுக அரசை கண்டிக்கும் வகையில் முக்காணி ஆற்றுபாலத்திற்கு மலர் வளையம் வைத்து முதலாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்படும் என பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2024/12/19/11734596931.jpg" style="width: 100%;"><br></p><p>அதன் அடிப்படையில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் தலைமையில் அக்கட்சியினர் பாலத்திற்கு மலர் வளையம் வைக்க முயன்றனர். இதனையடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசார் - மற்றும் பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய்து அங்குள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பாஜகவினரின் தடையை மீறிய இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.</p><p><br></p><p>மேலும், போலீஸ் தடுப்புகளையும் மீறி திடீரென பாஜகவினர் சிலர் மலர் வளையம் வைக்க மலர் வளையத்தோடு பாலத்தை நோக்கி ஓட்டம் பிடித்தனர். இருந்த போதிலும் போலீசார் அவர்களை விடாது துரத்தி பிடித்து தடுத்தனர். இதனால் மேலும் அங்கு பரபரப்பானது.</p>