<p><b>தூத்துக்குடியில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 20 மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு சக்கர நாற்காலிகளை கனிமொழி எம்பி வழங்கினார்.</b><br></p><p><br></p><p>தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், இன்று (7.12.2024) மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 20 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.1,06,000 மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலிகளை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி வழங்கினார்.&nbsp;</p><p><br></p><p>இந்நிகழ்வில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்&nbsp; ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.</p>