<p><b>தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் நாளை (நவ.,19) செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.</b></p><p><b style="color: rgb(255, 0, 0);">இது தொடர்பாக தூத்துக்குடி செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</b></p><p>தூத்துக்குடி துணை மின்&nbsp; நிலையத்தில் நாளை&nbsp; 19.11.2024&nbsp; செவ்வாய்க்கிழமை&nbsp; காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.</p><p>இதன் காரணமாக, தூத்துக்குடி மாநகரில் உள்ள போல்பேட்டை,&nbsp; ஆண்டாள் தெரு,&nbsp; சத்திரம் தெரு,&nbsp; 1 ஆம் கேட், 2 ஆம் கேட்,&nbsp; மட்டக்கடை,&nbsp; எட்டயாபுரம் ரோடு, தெப்பக்குளம்&nbsp; தெரு,&nbsp; முனியசாமிபுரம்,&nbsp; ரத்தினாபுரம்,&nbsp; சத்திரம் தெரு, சிவன்கோவில் தெரு, வ.உ.சி. ரோடு,&nbsp; மீனாட்சிபுரம், வி.இ.ரோடு, பங்களா தெரு, பால விநாயகர் கோவில் தெரு, டூவிபுரம், ஜெயராஜ் ரோடு,&nbsp; தாமோதர நகர், ஸ்டேட் பேங்க் காலனி, கந்தசாமிபுரம்&nbsp; இன்னாசியார் புரம், எழில் நகர்,&nbsp; அழகேசபுரம், திரவியபுரம்&nbsp; முத்துகிருஷ்ணாபுரம்,&nbsp;</p><p>சுந்தரவேல்புரம், அம்பேத்கார் நகர்,&nbsp; குறிஞ்சிநகர், அண்ணாநகர், வி.வி.டி. மெயின் ரோடு, போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளையங்கோட்டை ரோடு,&nbsp; சிதம்பரநகர், பிரையண்ட்நகர்&nbsp; முத்தம்மாள் காலனி, கே.டி.சி.நகர்,&nbsp; ஹவுசிங் போர்டு காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது&nbsp; என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p>