<p><b>தூத்துக்குடியில் மது குடித்ததை தனது தந்தை கண்டித்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.</b></p><p><b style="color: rgb(8, 49, 57);"><br></b></p><p><b style="color: rgb(8, 49, 57);">இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது :&nbsp;</b></p><p><br></p><p>தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்தவர் சாலமோன் மகன் மனோ கிறிஸ்டோபர் (29). இவர் அங்குள்ள ஒரு பிளேவுட் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் பணத்தை வீட்டிற்கு கொடுக்காமல் மது குடித்து செலவழித்து விட்டாராம்.&nbsp;</p><p><br></p><p>இதனால்,&nbsp; அவரது தந்தை அவரை கண்டித்துள்ளார். இதில் மன வேதனை அடைந்த மனோ கிறிஸ்டோபர்&nbsp; விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.</p><div><br></div>