<p><b>விமான நிலையத்திற்கு அருகே பயணிகள் பயன்படுத்திய முழுஉடல் கவசம், முக கவசம் ஆகியவை ஆங்காங்கே கிடப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.</b><br></p><p>உலக அளவில் கொரோனா அச்சுறுத்தல் இரண்டாவதாக வலம் வந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் சர்வதேச விமான பயணிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2021/02/08/11612787137.jpg" title="Vilasal news" style="width: 100%;"><br></p><p> </p><p>இந்நிலையில் உள்நாட்டு விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கர்மாவில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்காகவும், சமூக நலனுக்காகவும், முழு உடல் பாதுகாப்பு கவச உடைகள் மற்றும் முக கவசம் ஆகியவற்றை அணிந்து பயணம் செய்ய வேண்டும் என அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. </p><p>அதன்படி விமான பயணிகளும் பயணித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கும் மறுமார்க்கமாக சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கும் உள்நாட்டு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது.</p><p> </p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2021/02/08/11612787209.jpg" style="width: 100%;"><br></p><p>சென்னையில் இருந்து தூத்துக்குடி வரும் பயணிகள் கொரோனா&nbsp; பரிசோதனை செய்த பின்னர் விமான நிலையத்திலிருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அவ்வாறு வெளியேறும் பட்சத்தில் பயணிகள் அணிந்து வந்த முழு உடல் பாதுகாப்பு கவச உடைகள் மற்றும் முக கவசம் ஆகியவற்றை சாலைகளில் திறந்தவெளியில் வீசி செல்வது வாடிக்கையாக கொண்டுள்ளனர். </p><p>இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நோய் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமும் மக்களிடையே நிலவுகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகமும் விமான நிலைய அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.<br></p>