இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து : மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார்!
நிருபர்
July 20, 2024
இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து : மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார்!
<p><b>இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்தில் மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார. இது குறித்து தாளமுத்து நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.</b></p><p>தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே சிலோன் காலனியை சேர்ந்தவர் தவசி ( 19 ) மீனவரான இவர் நேற்று காலையில் இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து தருவைகுளத்திற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது தாளமுத்து நகர் குப்பை கிடங்கு அருகே சென்றபோது இவரது இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே தவசி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் ஆதாம் அலி மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.</p>