<p><b>எட்டயபுரம் அருகே கோவில் கும்பாபிஷேக விழாவில் 4 பெண்களிடம் 16 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்</b>.<br></p><p>இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது :</p><p>எட்டயபுரம் அருகே உள்ள இளம் புவனத்தில் நேற்று பூமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. காலையில் அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகம் ஆராதனை நடந்தது. அதனைத்தொடர்ந்து கோபுர கலசத்திற்கு அபிஷேகம் நடந்தது. அப்போது பக்தர்கள் பரவசத்துடன் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.</p><p>இந்த நெருக்கடியான சூழ்நிலையை பயன்படுத்தி 4 பெண்களிடம் 16 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். பக்தி பரவசத்தில் தங்க செயின் பறிபோனது தெரியவில்லை.<br></p><p>பூஜை முடிந்து பார்த்தபோது, கழுத்தில் கிடந்த நகை மாயமானது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்புவனம், செண்பகா நகரைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி சண்முகம்மாளிடம் (50) 5 பவுன் நகையும், சின்னமுத்து மனைவி ஆவுடையம்மாளிடம் (63)&nbsp; 3 பவுனும், மந்திரம் மனைவி பேச்சியம்மாளிடம் (60)&nbsp; 5 பவனும், பால்சாமி மகள் முருகேஸ்வரியிடம் (50) 3&nbsp; பவுனும் பறிபோனதாக எட்டயபுரம் காவல் துறையினரிடம் புகார் தெரிவித்தனர்.<br></p><p>இதனையடுத்து, எட்டயபுரம் காவல்துறையினர் நகையை அபகரித்துச் சென்ற ஆசாமிகளை தேடி வருகின்றனர்.<br></p>