மாமனாருக்கு அரிவாள் வெட்டு : மருமகன் கைது!
நிருபர்
July 10, 2024
மாமனாரை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்த மருமகனை போலீசார் கைது செய்தனர்.
<p><b>கோவில்பட்டியில் மாமனாரை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்த மருமகனை போலீசார் கைது செய்தனர்.</b></p><p><b>இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : </b></p><p>தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தெற்கு திட்டங்குளம் நேருஜி காலனியைச் சேர்ந்தவர் நாகராஜ் (50). கூலித் தொழிலாளியாக உள்ளார். இவரது மகள் சினேகாவுக்கும், பாரதி நகரைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் மரம் வெட்டும் தொழிலாளியான முத்துக்குமாருக்கும் (28) கடந்த 2017-ல் திருமணம் நடந்தது. </p><p>முத்துக்குமார் மது அருந்திவிட்டு வந்து தினமும் மனைவியிடம் தகராறு செய்வாராம். கடந்த 10 நாள்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட தகராறில், சினேகா கோபித்து கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டாராம். இதனையடுத்து ஜூலை 3-ம் தேதி சினேகாவின் பெற்றோர் வீட்டுக்குச் சென்ற முத்துக்குமார் அவருடன் தகராறு செய்து தாக்கியுள்ளார். இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தில் சினேகா புகார் அளித்தார்.</p><p>இந்நிலையில், நேற்றும் அங்கு சென்ற முத்துக்குமார் மீண்டும் தகராறு செய்து, அவரது மாமனார் நாகராஜை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் காயமடைந்த நாகராஜ் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். </p><p>இதையடுத்து, முத்துக்குமாரும் விஷமருந்தியதா கூறப்படுகிறது. இதுகுறித்து நாகராஜ் மனைவி வீரலட்சுமி அளித்த புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து மாமனாரை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்த மருமகனை கைது செய்து, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.</p>