ஓட்டப்பிடாரம் அருகே சங்கம்பட்டியில் தடுப்பணை அமைக்கும் பணியை யூனியன் சேர்மன் ரமேஷ் தொடங்கி வைத்தார்!
நிருபர்
July 09, 2024
ஓட்டப்பிடாரம் அருகே சங்கம்பட்டியில் தடுப்பணை அமைக்கும் பணியை யூனியன் சேர்மன் ரமேஷ் தொடங்கி வைத்தார்!
<p><b>ஓட்டப்பிடாரம் அருகே சங்கம் பட்டியில் கடந்த ஆண்டு பெய்த கனமழையில் அங்குள்ள பெரியகுளம் நிரம்பி குளத்தின் கரை முற்றிலுமாக உடைந்து சுற்றியுள்ள கிராமங்களில் மழை நீர் புகுந்து அதிகமான பாதிப்புகளை உண்டாக்கியது.</b></p><p>இதனையடுத்து பெரியகுளத்தின் கரையை சீரமைத்து தர சங்கம்பட்டி கிராம பொதுமக்கள் எம்எல்ஏ சண்முகையாவிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா நடவடிக்கையின் பேரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 35 லட்சம் மதிப்பீட்டில் பெரியகுளத்தின் கரையை பலப்படுத்தி தடுப்பணை அமைக்கும் பணிகளை இன்று ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2024/07/09/11720526527.jpg" style="width: 100%;"><br></p><p>இந்நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி, உதவி பொறியாளர் பால நமச்சிவாயம், பணி மேற்பார்வையாளர் ஶ்ரீநிதி, ஊராட்சி மன்ற தலைவர்கள் கணேசன், அருண்குமார், ஊராட்சி செயலர் அனிதா, ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>