<p><b>ஆனந்தவிளை - பூச்சிக்காடு இடையே தோட்டத்தில்&nbsp; மின்கசிவினால்&nbsp; &nbsp;ஏற்பட்ட&nbsp; தீ விபத்தில் பனை, முருங்கை மரங்கள் எரிந்து நாசமாகின.&nbsp;</b></p><p>சாத்தான்குளம் அருகே அரசூர் ஊராட்சிக்குள்பட்ட ஆனந்தவிளையில் இருந்து பூச்சிக்காடு செல்லும் பகுதியில்&nbsp; மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன . இதனை அப்பகுதி விவசாயிகள் உயர்த்தி கட்டகோரி மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் சீரமைக்கப்படாமல் உள்ளது.&nbsp;</p><p>இந்நிலையில், மின்கம்பிகள் உரசியதில் திடீரென தீ&nbsp; விபத்து ஏற்பட்டு அங்குள்ள&nbsp; தோட்டத்தில் உள்ள வேலி பகுதியில் தீ பற்றி எரிந்தது. காற்று பலமாக வீசியதில்&nbsp; தீ பரவி அருகில் உள்ள தோட்டங்களிலும் பரவியது. உடனே அருகில் உள்ளவர்கள் திசையன்விளை தீயணைப்பு&nbsp; மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு மீட்பு குழுவினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். </p><p>இதில் பனைவிளை முருகேசன் என்பவரது தோட்டம் உள்ளிட்ட&nbsp; அப்பகுதியில்&nbsp; உள்ள&nbsp; 4 தோட்டங்களில் தீ பிடித்து எரிந்ததில் 60க்கு மேற்பட்ட&nbsp; முருங்கை மரங்கள் பனை மரங்கள் கருகின.<br></p>