<p><b>தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மின்நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாதம் தோறும் அந்தந்த கோட்டத்துக்கு உட்பட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் வைத்து நடத்தப்பட்டு வருகிறது.&nbsp;</b></p><p>அதன் படி, இன்று திருச்செந்தூர் கோட்ட அலுவலகத்தில் மின்நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், தூத்துக்குடி மாவட்ட மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் ( பொறுப்பு) ரெமோனா கலந்துகொண்டு, மின்நுகர்வோர்களிடம் மனுக்களை பெற்றார். பின்னர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அவல் அறிவுறுத்தினார்.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2024/07/02/11719927845.jpg" style="width: 100%;"><br></p><p>இந்த முகாமில், திருச்செந்தூர் மின்&nbsp; விநியோக செயற் பொறியாளர் விஜய சங்கர பாண்டியன், உதவி செயற்பொறியாளர்கள் ஜெயக்குமார், ராம்மோகன், பேச்சிமுத்து, சாய்ஹரி கிருஷ்ணன், கணேசன், திருச்செந்தூர் மின் உதவி பொறியாளர்&nbsp; முத்துராமன் மற்றும் திருச்செந்தூர் கோட்டத்துக்குட்பட்ட அனைத்து உதவி மின் பொறியாளர்கள்&nbsp; கலந்து கொண்டனர்.</p>