<p><b>உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்று ஓட்டப்பிடாரம் அருகே&nbsp; குறுக்குசாலையில் கீதா ஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி காவல்துறை சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.&nbsp;</b></p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2024/07/01/11719852684.jpg" style="width: 100%;"><br></p><p>விழிப்புணர்வு பேரணியானது&nbsp; குறுக்குசாலை அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு இருந்து தொடங்கி குறுக்குசாலை பஜார் வழியாக இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் வரை சென்றடைந்து பேரணி நிறைவு பெற்றது.&nbsp;</p><p>பேரணியை&nbsp; தூத்துக்குடி போதை பொருள் நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் எழில் சுரேஷ் சிங், கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் இளங்குமரன் ஆகியோர் கொடி அசைத்து&nbsp; தொடங்கி வைத்தனர். பேரணியில் குறுக்குச்சாலை கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் போதை பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பதாகை பதாகைகளை ஏந்தி சென்றனர்.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2024/07/01/11719852721.jpg" style="width: 100%;"><br></p><p>இந்த நிகழ்ச்சியில், போதை பொருள் நுண்ணறிவு பிரிவு உதவி ஆய்வாளர் முருகன், ஓட்டப்பிடாரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குருசாமி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் உள்ளிட்ட&nbsp; ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>