<p><b>ஓட்டப்பிடாரம் அருகே குறுக்குச்சாலையில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட குழுக்கூட்டம் மாவட்டச் செயலாளர் லெனின் தலைமையில் குறுக்குசாலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.</b></p><p>அப்போது, மானாவரி விவசாயிகளுக்கு விவசாயம் செய்வதற்கு இலவச சிறப்பு தொகுப்பு நிதி&nbsp; வழங்க வேண்டும். பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும். மத்திய அரசால் வழங்கப்படும் பிஎம் கிஷான் உதவித்தொகையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.&nbsp;</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2024/07/01/11719851869.jpg" style="width: 100%;"><br></p><p>இந்நிகழ்ச்சியில், மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஆலோசகர்&nbsp; நல்லையா, ஒன்றியச் செயலாளர் அசோக் குமார், கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாவட்ட விவசாயிகள் விவசாயி சங்கத்தினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>